tamilnadu

img

வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கொந்தளிப்பு

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு


கவுகாத்தி,டிச.13-   இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற முயலும் வகையிலும் மக்களை  பிளவுபடுத்தும் வகையிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங் களில் வெள்ளியன்றும் போராட்டம் நடைபெற்றது.  பாஜக அரசு கொண்டுவந்துள்ள இச்சட்டத்தை எதிர்த்து அசாம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மக்களும் மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அசா மில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இணைய சேவை களை மத்திய அரசு முடக்கியுள்ளது.  அசாமின் 10 மாவட்டங்களில் கால வரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டு, ராணுவத்தினர் குவிக்கப் பட்டுள்ளனர். கவுஹாத்தி, தில்பர்க், தேஜ்புர் உள்ளிட்ட இடங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.டிசம்பர் 22 வரை அனைத்து பள்ளி களும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.   மூன்றாவது நாளாக வெள்ளியன்று அசாம், திரிபுரா,மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தொடர்ந் தது. போலீசாரின் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகைக்குண்டு தாக்கு தலையும் மீறி இப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

உச்சநீதிமன்றத்தில் அசாம் மாணவர்கள் வழக்கு

இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.   குடியுரிமை சட்டத் திருத்தம், ‘சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம்,  அனைவரும் சமம் என்பதை எந்த வகை யிலும் மறுக்க முடியாது’ என்பதை  வலியுறுத்தும் இந்திய அரசி யலமைப்புச் சட்டப் பிரிவு 14-க்கு  எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் சார்பிலும் வெள்ளி யன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி  வழக்கு தொடர்ந்துள்ளது.