tamilnadu

img

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு ....

சென்னை:
வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக  கடற்கரை  மற்றும்  அதனை  ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்  பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வாகனம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.