தஞ்சாவூர், ஜூன் 2- தஞ்சையில் வீட்டு வேலைக்கு அழைத்து வரப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கடும் சித்ரவதைக்கு உட்படுத்தி, சாலையில் வீசிச் செல்லப்பட்ட இளம் பெண்ணுக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை கைது செய்ய வலி யுறுத்தியும் சிஐடியு சார்பில் தஞ்சை ரயிலடியில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் என்.குருசாமி கண்டன உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் பி.என்.பேர் நீதி ஆழ்வார், கே.அன்பு, மாவட்டக்குழு ராம லிங்கம், ஈ.பி.எஸ்.மூர்த்தி, த.முருகே சன், கே.கல்யாணி, மில்லர் பிரபு, தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன், பொருளாளர் ராஜா, ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் சுரேஷ், ரயில்வே ஒப்பந்தத் தொழிலா ளர் சங்கம் நாகராஜன், மருந்து விற்பனை பிரதிநிதி சங்க துணைச் செயலாளர் ராமச்சந்திரன், ஆட்டோ சங்கம் ஜோசப் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால் கூறுகையில், “மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் பெண், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் அடையாளம் காணப்பட்ட குற்ற வாளியை கைது செய்ய வேண்டும். அதோடு தொடர்புடைய நபர்களை யும் கைது செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டும். ரூ. 5 லட்சம் இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும். புலம் பெயர் பெண் தொழிலாளர் மீதான வன் முறையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வீட்டில் 4 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, மேற்கு வங்கப் பெண் தெரி வித்துள்ளார். அவர்களை மீட்க காவல்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.