tamilnadu

கடைமடைப் பகுதிக்கு தண்ணீர்  கிடைக்க நடவடிக்கை எடுத்திடுக! வி.ச., வி.தொ.ச கோரிக்கை 

 தஞ்சாவூர், செப்.9- கடைமடைப் பகுதியை முறையாகத் தூர் வாரி பாச னத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வி.ச., வி.தொ.ச வலியுறுத்தி உள்ளது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் கூட்டுக்கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்திற்கு, விவசாய சங்க ஒன்றியத் தலைவர் பெரிய சாமி, வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் கே.லெட்சுமணன் ஆகி யோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.காசிநாதன் துவக்கவுரையாற்றினார். சிபிஎம் மதுக்கூர் ஒன்றியச்செயலாளர் வை.சிதம்பரம், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் எம்.அய்யநாதன், நிர்வாகிகள் அரிதாஸ், வேணுகோபால், வி.தொ.ச நிர்வாகிகள் குப்புசாமி, காசிநாதன், சுப்பிர மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், “டெல்டா மாவட்டங்களை பாலைவன மாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். மதுக்கூர் உள்ளிட்ட கடைமடைப் பகுதி பாசன வாய்க்கால் களை தூர்வாரி, பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி மராமத்து செய்து தண்ணீர் நிரப்பித் தர வேண்டும். விவசாயத்திற்காக வங்கி களில் அடகு வைத்த நகைகளை ஏலம் விடுவதை ஒத்திவைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.