தஞ்சாவூர், அக். 28- தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி ஒன்றியம் பெரியநாயகிபுரம் ஊராட்சி துலுக்கவிடுதி கிராமத்திற்கு செல்லும் முந்திரிக்காட்டு மண் சாலை குண்டும் குழியுமாக போக்கு வரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளதால் பொதுமக்கள் மழைக் காலமாக இருப்பதால் தினசரி இன்னலை அனுபவித்து வரு கின்றனர். உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துலுக்கவிடுதி கிராம மக்கள் தங்களது அன்றாட தேவைக ளுக்காக ஆவணம் வந்து அங்கி ருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்வ தற்கு முந்திரிக்காட்டு மண் சாலை யை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1992 ஆம் ஆண்டு மண் சாலை போடப்பட்டு மேம்படுத்தப்படாமல் மண் சாலையாக மட்டுமே இருப்ப தால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மழை நீர் தேங்கி மோசமான நிலையில் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வயோதிகர்கள், விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய கொண்டு செல்வோர், மருத்துவமனைக்கு செல்லும் நோ யாளிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தினசரி பல்வேறு இன்னல்களை அனுப விக்கின்றனர். இது குறித்து தஞ்சை ஆட்சிய ருக்கு புகார் அனுப்பப்பட்டதில், “சாலை வன இலாகாவிற்கு சொந்த மான இடத்தின் வழியாக செல்வதால் வனத்துறையின் அனுமதி பெற்று ஒன்றிய சாலை பதிவேட்டில் சேர்த்து தார்ச் சாலையாக மாற்றப்படும்” என தகவல் தெரிவித் துள்ளனர். ஆனால் வனத்துறையிடம் அனுமதி வாங்காததால் சாலை போடப்படாமல் மண்சாலையாகவே உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி காலம் தாழ்த்தாமல் உடனடி யாக வனத்துறை அனுமதி பெற்று மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றுவதோடு தெருவிளக்கும் அமைத்து தர வேண்டுமென துலுக்க விடுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.