தஞ்சாவூர், செப்.5- பாலியல் வன்முறைகளை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் துக்கு சங்கத்தின் மாநகரச் செயலாளர் இ.வசந்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாயி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும்.பெண் களை இழிவாக பேசிய ஆடிட்டர் குரு மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பெண்களை இழிவாக பேசும் ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண் டும். எரிவாயு உருளை மற்றும் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர். மாநகரத் தலை வர் வின்சிலா ராணி, பொருளாளர் வெங்கடேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான மாதர்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.