tamilnadu

img

டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்

தஞ்சாவூர்: பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  திங்கள்கிழமை அன்று, பேரூராட்சி அலுவலகத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் மு.மணிமொழியன் தலைமையில் நடைபெற்றது. இளநிலை உதவியாளர் த.ராஜேந்திரன், துப்புரவு ஆய்வாளர் கா.தமிழ்வாணன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், டெங்கு ஒழிப்பு களப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க, டெங்கு ஒழிப்பு களப்பணியா ளர்களுக்கு நிலவேம்பு பொடியை வழங்கி, சுகாதாரம் குறித்த அறிவுறுத்தல்களை செயல் அலுவலர் வழங்கினார். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் மு.மணிமொழியன் கூறியதாவது:  டெங்கு ஒழிப்பு களப் பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது. ஒட்டு மொத்த துப்புரவு பணிகள் நடந்து வருகின்றது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு துப்புரவு ஆய்வாளர் மேற்பார்வையில் நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. டெங்கு ஒழிப்பு களப் பணியாளர்கள் மூலம் தொடர்ச்சியாக, சுழற்சி முறையில் கண்காணிப்பு நடவடிக்கைகளும், நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.  பேரூராட்சி தீவிர நடவடிக்கைகள் காரணமாக பிளாஸ்டிக் குப்பைகள் சேருவது பெரு மளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.