கும்பகோணம், அக்.20- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சி யார்கோவிலில் பிளாஸ்டிக் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாச்சியார்கோவில் லேம் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஃபயர் பிரண்ட்ஸ் இணைந்து நடத்திய மாரத்தான் ஓட்டப்பந்தயம் நாச்சி யார்கோவிலில் நடைபெற்றது. மாரத்தான் பந்தயத்திற்கு ரோட்டரி சங்க தலைவர் ராமதாஸ் தலைமையேற்றார். போட்டியை, திருவிடைமருதூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் மற்றும் நாச்சியார்கோவில் காவல் ஆய்வாளர் ரேகா ராணி துவக்கி வைத்தனர். இதில் பத்து கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடத்தில் இலக்கை அடைந்து பந்தயத்தில் முதல் மூன்று பிடித்து வெற்றி பெற்ற வர்களுக்கு ரொக்கப் பரிசும் நினைவு பரிசும் வழங்கப் பட்டது அதே போல் சிறுவர்களுக்கான ஐந்து கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரர்கள் வீராங்கனைக்கு ரொக்க பரிசும் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளர் ராஜா, சங்க பொறுப்பாளர்கள் சீனிவாசன் செந்தில்குமார் உமாசங்கர் ஆசிரியர் சுந்தர்ராஜன் மற்றும் விக்னேஷ் ஜானகிராமன் சர்னேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி யில் நாச்சியார் கோயில் காவல்துறை ஆய்வாளர் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பற்றிய விழிப்புணர்வு தகவல்களை மாணவர்களிடம் தெரிவித்தார்.