tamilnadu

முழு ஊரடங்கை மீறி திறந்த கடைகளுக்கு பூட்டு

தஞ்சாவூர், ஜூலை 6 - தஞ்சை மாவட்டம் பேராவூரணி நகர் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை கொ ரோனா முழு ஊரடங்கையும் மீறி  திறந்திருந்த தேநீர்க் கடை மற்றும் பெட்டிக் கடை உள்ளிட்ட 7 கடைக ளுக்கு பூட்டு போடப்பட்டது.  பேராவூரணி காவல் உதவி ஆய்வா ளர் இல.அருள்குமார் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆதிமூலம், நாட்டாணிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், மாவடுகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் விஜய், கிராம  உதவியாளர்கள் சக்திவேல், சரவ ணன், சிவகுமார் மற்றும் ஊர்க்காவல் படையினர், பேராவூரணி நகர் பகுதி யை சேர்ந்த கருப்பையன், சின்னை யன், சோமசுந்தரம், நீலகண்டன், சுப்பி ரமணியன், ரவி, உமா ஆகியோரின் தேநீர் மற்றும் பெட்டி கடைகளுக்கு பூட்டு  போட்டனர்.