tamilnadu

img

பூதலூர் பகுதி ஏரிகள் தூர்வாரும் பணி துவக்கம்

தஞ்சாவூர், ஜூலை 18- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் மற்றும் திரு வையாறு வட்டங்களில் குடிமராமத்து திட் டத்தின் கீழ் ரூ.46.05 லட்சம் மதிப்பில் பணி களை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார். பூதலூர் வட்டம் நல்லூர் ஏரி, ஓலமுத்து ஏரி, நெப்பி ஏரி, வெட்டி ஏரி, வெண்டை யம்பட்டி ஏரி ஆகிய ஏரிகளில் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி மற்றும் வெண்டையம்பட்டி ஏரியில் மதகு மறுகட்டுமானப் பணி, பூதலூர் வட்டம் கரியபட்டி கிராமம் புதியகட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து பிரியும் கிளை வாய்க் கால் எண்.23-னை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.  திருவையாறு வட்டம், செந்தலை மற்றும் வளப்பக்குடி கிராமங்களில் ஈஸ்வரன் கோவில்பத்து வாய்க்கால் 3800மீ வரை யிலும், வளப்பக்குடி வடிகால் 4500 மீட்டர் வரை தூர்வாருதல் பணி, பூதலூர் மற்றும் திருவையாறு வட்டம், திருச்சினம்பூண்டி, நேமம், பூண்டி, நடுப்படுகை ஆகிய கிரா மங்களில் விஷ்ணம்பேட்டை பழையநாடு வாய்க்கால் 2400 மீ வரை தூர்வாரும் பணி, பழைய நேமம் வாய்க்கால் 2000 மீ வரை தூர்வாரும் பணி, நாகாச்சி பொன்னாரை வாய்க்கால் 2700 மீ வரை, நடுப்படுகை வடக்கு வாய்க்கால்  6000 மீ வரை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.  ஆய்வில் பூதலூர் தெற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், கூட்டுறவு சங்கத் தலைவர் டி.செந்தில், விவசாயி சங்க பிரதிநிதி கள் எஸ்.வியாகுலதாஸ், ராமச்சந்திரன், ராஜேந்திரன், இளங்கோவன், ரவி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.