tamilnadu

பெரியகோவில் குடமுழுக்கு விழா 1272 நகராட்சி பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசு

தஞ்சாவூர், பிப்.8- தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழாவின் போது துப்புரவுப் பணி உள்ளிட்ட  பல்வேறு பணிகளை ஆற்றிய 1,272 பணியா ளர்களுக்கு தலா ரூ.1000 ஊக்கப்பரிசை மாவட்ட ஆட்சியர் வழங்கி பாராட்டினார். தஞ்சாவூர் பெரிய கோயில் குட முழுக்கு விழாவுக்காக தஞ்சாவூர் நகராட்சி  நிர்வாக மண்டலத்துக்குட்பட்ட 18 நக ராட்சிகள், மதுரை நகராட்சி நிர்வாக மண்ட லத்துக்குட்பட்ட 8 நகராட்சிகள், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சியைச் சேர்ந்த  துப்புரவு பணியாளர்கள், ஓட்டு நர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் என 1,272 பேர் கடந்த ஜன.30 முதல் பிப்.6 வரை தஞ்சாவூரில் பணி யாற்றினர். இவர்களது பணியை பாராட்டி வெள்ளிக்கிழமை தஞ்சாவூரில் பாராட்டு விழா வும், பாராட்டு சான்றிதழ் மற்றும் ஒவ்வொ ருவருக்கும் ரூ.1000 ரொக்க ஊக்கப் பரிசை  மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் வழங்கி னார். விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணை யர் ஜானகிரவீந்திரன், வருவாய் கோட்டாட்சி யர் வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.