தஞ்சாவூர், ஜூலை 22- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மணக்காடு கிளை நூலகம் முன்பாக குடிநீருக்கு கட்டணம் வசூ லிக்கும், மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய நீர்வளத்துறை ஜல்சக்தி மிஷன் என்ற பெயரில், பொது குடிநீர் குழாயை அகற்றி விட்டு, வீடுகளுக்கு குடிநீர் வழ ங்குவதாக அறிவித்து, அதற்கென டெபாசிட், குடிநீர் கட்ட ணம், தண்ணீர் பயன்பாட்டிற்கு மீட்டர் பொருத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்கும் முயற்சி யில் ஈடுபட்டு வருகிறது எனக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவ ட்டக் குழு உறுப்பினர் வி.கருப்பையன் தலைமை வகித்தார். பெண்கள் காலிக்குடங்களுடன் கலந்து கொண்டு, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என முழக்க ங்களை எழுப்பினர்.