tamilnadu

img

கண்கள் தானம்

கும்பகோணம்,நவ.1- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் பொன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் முன்னாள் அரசு விரைவு போக்குவரத்து கழக நடத்துனர் சேகர், பூக்கடை தமிழழகன், ஆனந்தன், சுகுமார், உஷா, பூக்கடை முத்து ஆகியோரின் தகப்பனாரும் இ-சேவை மையம் உரிமையாளர் குணா, தாத்தாவுமாகிய எஸ்.பட்டு வயது 85, அக்.30 காலை வயது மூப்பு காரணமாக காலமானார்.  தகவலறிந்து அனைத்து கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். மறைந்த எஸ்.பட்டு கண்கள் தானமாகப் பெறப்பட்டு நாச்சியார் கோவில் லயன்ஸ் சங்கம் மூலமாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதனால் இருவருக்கு கண் பார்வை கிடைக்குமென தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது நினைவாக திருநாகேஸ்வரம் முதியோர் காப்பகத்திற்கு சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள ஏர் பெட் சாய்வு கட்டில் அவரது குடும்பத்தாரால் வழங்கப்பட்டது.