tamilnadu

img

கபடிப் போட்டியில் கூடலூர் அணி வெற்றி

 

 கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் கபடி கழகம் சார்பில் நடைபெற்ற போட்டிக்கு நாச்சியார்கோவில் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி உமாசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட கபடி கழக துணைத் தலைவர் தங்க. முருகானந்தம் வரவேற்றார். முதல் சுற்றை ஒன்றிய குழு உறுப்பினர் குப்புசாமி, உமாசங்கர் சேகர் ஆகியோர் துவக்கி வைத்தனர் தமிழகத்திலுள்ள மாவட்ட அளவிலான கபடி அணியினர் கலந்து கொண்டனர்.  போட்டியில் கூடலூர் அணி முதல் பரிசு 25 ஆயிரம் ரொக்கமும் சுழற் கோப்பையும் வென்றது. இரண்டாம் பரிசாக  15 ஆயிரம் ரொக்கப் பரிசும் சுழல் கோப்பையை அன்னை தெரசா திருவையாறு அணியினர் பெற்றனர். மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு கும்பகோணம் டைமன் அணியினருக்கும் நான்காவது பரிசாக 10 ஆயிரம் ரொக்கமும் குத்துவிளக்கும் திருப்புறம்பியம் ஓய்எம்சி கபாடி அணியினர்க்கும் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த ஆட்டக்காரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பூம்புகார் முன்னாள் கண்காணிப்பாளர் விஜய குமார் நன்றி கூறினார்.