தஞ்சாவூர், ஜூன் 11- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முதுகாடு ஊராட்சி. அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண் சென்னையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி சென்னையில் இருந்து அவர் சொந்த ஊருக்குத் திரும்பினார். இதையடுத்து வருவாய்த்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் அவரை வீட்டில் தனிமைப்படுத்தினர். மேலும் சுகாதாரத் துறையினர், அவருக்கு சளி மாதிரி எடுத்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் புதன்கிழமை மாலை வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள், அவரை 108 சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் இருந்த பகுதியில், பிளீச்சிங் பவுடர், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.