tamilnadu

img

ஆசிரியருக்கு விருது

 தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஹாஜா மைதீன். இவருடைய கல்விப் பணியை பாராட்டி, திருநெல்வேலி பசுமை நகர அரிமா சங்கம், டீம் டிரஸ்ட் சார்பில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், “சிறந்த கல்விச் சிந்தனையாளர்- 2019 என்ற விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியரை பள்ளித் தலைமை ஆசிரியர் சித்ரா தேவி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கௌதமன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.