tamilnadu

img

மாணவர் குடும்பங்களுக்கு உதவி

பேராவூரணி, ஜூன் 6- தஞ்சை மாவட்டம் கொன்றைக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரி யர்கள் தங்களது சொந்தச் செலவில், மாண வர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினர். ஊரடங்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் 160 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண தொகுப்பு வழங்கப் பட்டது. பேராவூரணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் இரா.வேம்பையன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பெ.தேன்மொழி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டி.ரவீந்திரன், ஊராட்சி தலைவர் ஆர்.செந்தில்குமார், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் இராம.தனலெட்சுமி முன்னிலை வகித்தனர்.  முன்னதாக ஆசிரியர் ச.இளையராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் க.ரெத்தின வேலு, கிராம கல்வி குழு தலைவர் சி.மயில் வாகணன், கிராம முக்கியஸ்தர்கள் வி.எம்.தங்கவேல், ஆர்.ரெங்கசாமி, கல்வி புரவலர் த.திருஞானம், ஆர்.கே.பாலசுப்பிரமணியன், ஆசிரியர்கள் க.இமாகுலேட் மேரிகிரிஜா, மா.பவுனம்மாள் கலந்து கொண்டனர்.