கும்பகோணம், ஜூன் 25- பருத்திக்கு கட்டுப்படியான விலை கேட்டு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட் டத்திற்கு ஒன்றிய செயலாளர் வி. முரளிதரன் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் தங்கராசு, துணைத் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், விவ சாய சங்க மாவட்ட செயலாளர் என். வி.கண்ணன், தலைவர் செந்தில் குமார், மாவட்ட துணை செயலாளர் பி.எம்.காதர் உசேன், மாவட்ட குழு உறுப்பினர் கஸ்தூரிபாய் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பருத்தி விவசாயிகளை பாதுகாத்து குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ 5550 விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்டவை ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டன.