tamilnadu

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக! தஞ்சாவூரில் இளைஞர்கள் ஆவேசம்

தஞ்சாவூர், ஜூன் 23- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண் டும். காவிரி டெல்டா மாவட் டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தஞ்சையில் சனிக்கிழமை மாலை திறந்தவெளி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. மாநாடு மற்றும் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்து 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து தடையை மீறி பேரணி தொடங்கவிருந்த சிவகங்கை பூங்கா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இதில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், வாலிபர் சங்க மாநிலச் செய லாளர் எஸ்.பாலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில இணை செயலாளர் கே.பி.ஜோதிபாசு, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் நாரா யணன், கடலூர் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன், திருச்சி மாவட்ட செயலா ளர் லெனின், மாவட்ட பொரு ளாளர் ராமன், மாவட்டக் குழு ரஞ்சித், தமிழினியன், சுந்தர பாண்டியன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அர விந்தசாமி உள்ளிட்ட நூற் றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத் திற்கு, வாலிபர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் கே. அருளரசன் தலைமை வகித் தார். மாவட்ட தலைவர் ஆம் பல் துரை.ஏசு ராஜா நன்றி கூறினார்.