தஞ்சாவூர், பிப்.9- தஞ்சையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தனியார் துறை வேலை வாய்ப்பு முகா மினை சனிக்கிழமை மன்னர் சரபோஜி அரசினர் கலைக் கல்லூரியில் நடத்தினர். வேலைவாய்ப்பு முகா மில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள 10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, நர்சிங், தொழிற்கல்வி, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள், இளம்பெ ண்கள் என மொத்தம் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 77 தனியார் துறை நிறுவங்களை சேர்ந்த மனித வள மேம்பாட்டு அலுவ லர்கள் நேர்காணல் நடத்தி னர். இதில் 423 பேருக்கு பணி நியமனம் ஆணை வழங்க ப்பட்டது. 267 நபர்கள் இர ண்டாம் கட்ட தேர்விற்கும், 71 நபர்கள் திறன் பயிற்சி க்கும் தேர்வு செய்யப்பட்டு ள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவி ந்தராவ் தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூர், கும்ப கோணம், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், திருப்பூர் மற்றும் சென்னை போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த 77 நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள், சேவை நிறுவனங்கள், தனியார் வங்கிகள், கணினி மென் பொருள் நிறுவனங்கள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிறுவ னங்கள், இயற்கை அழகு சாதன விற்பனை நிறுவ னங்கள் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் செ.ரமேஷ்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் மு.ராஜ்குமார், திட்ட அலு வலர்கள் (மகளிர் திட்டம்) மற்றும் பல்வேறு அரசு த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.