tamilnadu

img

உலகத் துப்பாக்கிச் சுடுதல் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்

பிரேசில் நாட்டின் முக்கிய நகரான ரியோ டி ஜெனிரோவில் உலகத் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா 244.2 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். துருக்கியைச் சேர்ந்த இஸ்மாயில் கெலஸுக்கு (243.1 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் சவுரவ் செளத்ரிக்கு (221.9 புள்ளிகளு  டன்) வெண்கலப்பதக்கமும் வென்றார்.  ஒரே நாளில் இந்தியாவிற்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி கிடைத்துள்ள நிலையில், உலகத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் மொத்தம் 4 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் (மாலை 4 மணி நிலவரம்) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.