சேலம், மே 11-சேலம் அஸ்தம்பட்டி உள்ள நவீனஎரிவாயு தகன மேடையை இடமாற்றம்செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி மையப்பகுதியில் காக்காயன் சுடுகாடு மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்தில் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்காக சேலம் மாநகராட்சி சார்பில் மின்சார எரிவாயு தகன மேடை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த காக்காயன் சுடுகாட்டில் சேலம் மாநகரத்தின் சுற்றியுள்ள பல பகுதியிலிருந்து இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்காக நாளொன்றுக்கு 10 க்கும் மேற்பட்ட உடல்கள் இங்கு வந்து ஏரிக்கபட்டு வருகிறது. இந்த நவீன எரிவாயு தகன மேடை முறையாக பராமரிக்கப்படாததால் பிணங்கள் எரிக்கப்படும் போது அதிலிருந்து வெளியேறக்கூடிய புகை தரைப் பகுதியில் பரவி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது.இதனால், இந்த புகையினால் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருவதால், அப்பகுதி மக்கள் இந்த நவீன தகவல் மேடையை இடமாற்றம் செய்யக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சேலம் மாநகராட்சியில் நவீன தகனமேடை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சேலம் அஸ்தஸ்பட்டி மாநகராட்சி நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த நவீன நாடக மேடையை ஒழுங்குபடுத்தி பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் மாற்றி அமைக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்து இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.