tamilnadu

img

சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

இளம்பிள்ளை, ஜன.19- இளம்பிள்ளை பேரூராட்சி யில் நிறுத்தப்பட்ட சாலை செப்ப னிடும் பணியை மீண்டும் துவங்கி விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி,இளம்பிள்ளை பேரூராட்சி பகுதிக்குட்பட்ட 4ஆவது வார்டில் ரெட்டிமணியக்காரனூர் உள்ளது. இப்பகுதியிலிருந்து மேல் காட்டுவளவு பகுதி வரை மற்றும் 10ஆவது வார்டு திருமலைகவுண் டர் தெரு,கத்தாளப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள தார்ச்சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் பல வருடங்க ளாக இருந்தது. இதனை சீரமைக்க அப் பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நகர்ப் புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத் தின் கீழ்  புதிய தார்ச்சாலை அமைப் பதற்காக ரூ.1கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாலை சீரமைக்கும் பணியை சட்ட மன்ற  உறுப்பினர்  மனோன்மணி தொடங்கி வைத்தார். ஆனால் சாலை அமைக்கும் பணிகாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜல்லிகற்கள் மட்டும் கொட்டப்பட்ட நிலை யில் பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ள  நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் சாலையில் செல்ல முடியாமல் சிரமப் பட்டு வருகின்றனர்.மேலும்,வாக னங்கள் செல்லும்போது புழுதி கிளம்பு வதால் இப்பகுதியில் செயல்ப டும் அங்கன்வாடி மற்றும் அரசு நடுநி லைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடி யாமல் தவித்து வருகின்றனர். விசைத் தறி நெசவாளர்களும் கடும் இன்ன லுக்கு ஆளாகி வருகின்றனர்.  எனவே, மாவட்ட நிர்வாகம் சாலை செப்பனிடும் பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;