tamilnadu

img

சளி, இருமல் இருப்பவர்கள் மட்டுமே முகக் கவசங்களை அணியுங்கள் - மாவட்ட ஆட்சியர்

சேலம், மார்ச் 19- சளி, இருமல் இருப்பவர்கள் மட்டுமே முகக் கவசங்கள் அணியு மாறு சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் கூறியுள்ளார்.  சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில், அனைத்து அலு வலர்கள் மற்றும் பணியாளர்களுக் கான கொரோனா வைரஸ் நோய் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழ னன்று நடைபெற்றது. இந்நிகழ் வுக்கு மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமை வகித்து பேசியதா வது, சேலம் மாவட்டத்தில் இது வரை கொரோனா வைரஸ் நோய்  தாக்கம் ஏதுமில்லை என்ற போதி லும், வரும் முன் காப்போம் என்பதை  முக்கியமாகக் கொண்டு நோய்  தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்ற அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்க ளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத் தப்பட்டுள்ளது. இதை வெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மட் டுமே தாங்கள் கருதாமல் மருத்து வர்கள் எடுத்துரைத்தது போல  கைகளை சுத்தமாக கழுவுதல் உள் ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.  கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச் சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகிய வற்றை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகை வைரஸ் கிருமியாகும்.நோய் தடுப்பு நடவடிக்கையாக தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு, கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவும். இளநீர், ஓ.ஆர்.எஸ், கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்கணை பருகுதல் வேண்டும். பொதுமக்கள் சுற்றுலா செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  கொரோனா வைரஸ் நோய் பாதுகாப்பு என்று எண்ணி அனை வரும் முகக்கவசம் அணிவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சளி, இருமல் ஏதேனும் இருப்ப வர்கள் மட்டுமே முகக் கவசங்களை அணிந்து கொள்ளலாம். அவ்வாறு பயன்படுத்திய முகக்கவசங்களை குப்பைத் தொட்டிகளில் அப்படியே போடாமல் பயன்படுத்துவோரே அவற்றை அழித்திடுவதோடு குப்பை சேகரிக்கும் சுகாதாரப் பணியாளர்களின் ஆரோக்கியத்திற் கும், அவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கும் உதவிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கொரோனா வைரஸ் நோய் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விழிப்பு ணர்வு நிகழ்ச்சியில் கை கழுவுவ தன் அவசியம் குறித்து எடுத்துரைக் கப்பட்டதோடு, இந்நோய் தாக்கத் தில் இருந்து தம்மை எவ்வாறு பாது காத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட் டது.  இந்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவ லர் இரா.திவாகர், சேலம் பசுமை வழிச்சாலை வருவாய் அலுவலர் குழந்தைவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செல்வக் குமார், சேலம் மாநகர காவல் துணை  ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு)  பெ.தங்கதுரை, இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) மரு.மலர்விழி வள்ளல், துணை இயக்குநர் (சுகா தாரப் பணிகள்) மரு.நிர்மல்சன், சேலம் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் மரு.பார்த்தீபன், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஆர்.பாலாஜிநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) என்.கோபிநாத் உட்பட தொடர் புடைய அலுவலர்கள் மற்றும்  மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்ட னர்.