சேலம்,பிப்.12- சேலம் ஒன்றியம், காட்டுமரக் குட்டை தீண்டாமை சுவரை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலிபர் மற்றும் மாதர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் ஒன்றியம் சன்னியா சிகுண்டு பஞ்சாயத்துக்குட்பட்ட காட்டுமரக்குட்டை கிராமத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் 4 தலைமுறையாக வசித்து வருகின்றனர். காலங்காலமாக இவர்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தடுத்து அப்ப குதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் சுவர் கட்டியுள்ளதால் கிராம மக்கள் பாதையின்றி பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுப்பாதையை தடுத்து கட்டப்பட்டுள்ள தீண் டாமை சுவரை அகற்றக்கோ ரியும், நீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்தாத ஆட்சியாளர்க ளையும், மாவட்ட நிர்வாகத்தை யும் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அக்கிராம மக்கள் இணைந்து செவ்வாயன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டத்திற்கு வாலிபர் சங்க மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் ஜெ.செல்லக்கண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சேலம் மாவட்ட தலைவர் ஆர்.குழந்தை வேல், சிபிஎம் கிழக்கு மாநகர செயலாளர் பி.ரமணி, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஐ.ஞானசௌந்தரி, வாலி பர் சங்க மாவட்ட செயலாளர் பி.கணேசன், கிழக்கு மாநகர தலைவர் பிரபாகர், மாநகர செயலாளர் பெரியசாமி மற்றும் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை அளித்த னர். முன்னதாக, காட்டுமரக் குட்டை பகுதியில் கட்டப்பட் டுள்ள தீண்டாமை சுவரை சங்க தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.