எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகரக்குழுவின் சார்பில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.தர்மலிங்கம், எம்.சேதுமாதவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.முருகேசன், ஜி.கண்ணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.