tamilnadu

img

வி.தொ.ச தலைவரை தாக்கிய அதிமுக குண்டர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆவேசம்

சேலம், நவ. 9- விவசாயத் தொழிலாளர் சங்க தலை வரை தாக்கிய, அதிமுக பிரமுகர்களை கைது செய்ய வலியுறுத்தி தம்மம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், செந்தாரபட்டி பேரூ ராட்சியில் அண்மையில் 100 நாள் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம் நடை பெற்றது. இதில் பங்கேற்க சென்ற விவசாய தொழிலாளர் சங்க கெங்கவல்லி தாலுகா செயலாளர் வெங்கடாஜலத்தை, அப்பகுதியைச் சார்ந்த அதிமுக பிரமுகர்க ளான செல்லதுரை மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் கண்மூடித்தனமாக தாக்கியும், சாதி பெயரை குறிப்பிட்டு இழிவாக பேசி யுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த  வெங்கடாஜலம் ஆத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி னார்.

இதனைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. ஆனால், தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.  இந்நிலையில், விவசாய தொழிலாளர் சங்கத்தின் கெங்கவல்லி தாலுகா செயலா ளரை தாக்கிய அதிமுக பிரமுகர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தம்மம்பட்டி பேருந்து நிலையம் முன்பு  சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.தங்க வேலு  தலைமையில் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் மாநில செயலாளர்  வி.அமிர்த லிங்கம், மாவட்ட செயலாளர் ஜி.கணபதி,  சிபிஎம்  மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.முருகே சன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.