tamilnadu

img

மின் அழுத்தத்தை கண்டறியும் சாதனங்கள் ஊழியர்களுக்கு வழங்கியது மின்வாரியம்

சென்னை, மே 18- மின்வாரிய முன்களப் பணியாளர்களுக்கு பாது காப்பு கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் சனிக்கிழமை (மே 18) நடைபெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவுறுத்தலின்படி சென்னை பகிர்மான மண்டலத்திற்குட்பட்ட சென்னை மின் பகிர்மான வட்டம் மேற்கு திட்டத்தின் சார்பில் அண்ணா நகர் கோட்டத்தில் களப்பிரிவில் பணிபுரியும் முன்களப் பணி யாளர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய பாதுகாப்பு உப கரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மிக முக்கிய உபகர ணங்களான தலைக்கவசம் மற்றும் மின் கம்பியில் உள்ள மின்சார நிலையை மின்கம்பிக்கு அரு காமையில் செல்லும் முன்பே அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள “உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்சார நிலையை கண்டறியும் கருவி” ஆகியவை வழங்கப்பட்டன. இந்த உபகரணங்களை சென்னை மின் பகிர்மான வட்டம் மேற்கு திட்ட மேற்பார்வை பொறியாளர் பி.சித்ரா முன்களப் பணி யாளர்களுக்கு வழங்கினார்.

அண்ணா நகர் கோட்ட செயற்பொறியாளர் அன்ப ரசன், உதவி செயற்பொறி யாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உபகரணங்களை பெற்றுக் கொண்ட களப்பணி  யாளர்கள், இந்த உபகரணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் இத னால் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தனர்.