அரசின் விதிகளை மீறி செயல்படும் இறால் குட்டைகள்
சிதம்பரம்,செப்.20- சிதம்பரம் அருகே அரசின் விதிகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வரும் இறால் குட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் சிதம்பரம் சாராட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுத்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியம் கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட பொன்னந்திட்டு பகுதியில் விதிகளை மீறி இறால் பண்ணைகள் நடத்தப்படுகின்றன. மேலும், பாசனத்திற்கு ஆதாரமான, புகழ் பெற்ற பக்கிங்காம் கால்வாயில் நச்சு பொருட்களையும் வேதி பொருட்களையும் கலந்துள்ள கழிவுநீரை திறந்துவிட்டு நாசப்படுத்துகிறது. இதனால், அப்பகுதியின் குடி நீர், விவசாயம், நிலத்தடி நீர், கால்நடைகள் மேய்சல் அனைத்தும் பாழாகி வருகிறது. எனவே, அந்த இறால் பண்னைகளின் அனுமதியை ரத்து செய்யக் கோரி கிராம பொது மக்கள் சார்பில் ஜூன் 17 ஆம் தேதி மனுஅளித்தோம். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி அனைத்து கட்சிகள் சார்பில் பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தியபோது நடந்த பேச்சு வார்த்தையில் 30 தினங்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாய நிலங்கள், குடியிருப்புகள் அருகாமையில் இறால் பண்ணைகள் அமைக்கக்கூடாது என்ற அரசின் விதி மீறப்பட்டுள்ளது. பாசன வாய்க்காலில் கழிவுகள் கலக்கூடாது என்ற விதி மீறப்படுள்ளது. இறால் பண்ணைகளுக்கு மோட்டார் அமைத்து நிலத்தடி நீரை எடுக்கக்கூட்டாது என்ற விதி மீறப்பட்டுள்ளது. இத்துனை விதி மீறல்களை செய்துள்ள ஆந்த இறால் பண்ணைகளின் அனுமதியை தாங்கள் ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்கள்.
கொடைக்கானலில் விதிமீறல் கட்டடங்கள்: வழிபாட்டுத் தலங்களுக்கு விலக்களிக்க மறுப்பு
மதுரை, செப்.20- வழிபாட்டுத் தலங்களுக்கு விதிமீறல் நட வடிக்கையில் இருந்து விதிவிலக்கு கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல் நகராட்சிப் பகுதியி்ல் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதை யடுத்து கொடைக்கானல் நகராட்சியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருக்கும் வழி பாட்டுத் தலங்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிராக வழிபாட்டு ஸ்தலங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், கோவில்கள், மசூதிகள், தேவால யங்கள் மிகவும் பழமையானவை. அவற்றிற்கு விதிவிலக்கு வழங்க வேண்டு மெனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை நீதிபதிகள் என். கிருபாகரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு வியாழனன்று விசாரித்தது. அப்போது, வழிபாட்டுத் தலங்கள் முறை யாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையாக கட்டட வரைபட அனுமதி பெற்று வழிபாட்டு தலங்கள் கட்டப்படாத தால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக்கூறி மனுக்களை தள்ளு படி செய்தனர்.
5, 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு சாத்தியமில்லை: துரைமுருகன்
வேலூர், செப். 20- வேலூர் ஊரிசு கல்லூரியில் தமிழ்மன்ற தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற துரைமுருகன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் அவர்கள் இந்தி திணிப்பை தான் புகுத்துகிறார்கள். இந்தியை திணிப்பது ஒன்றும் புதிதல்ல. இந்தியை எல்லா மாநிலத்தின் மீதும் சட்டம் இயற்றி திணிப்பது என்பது சாத்தியமில்லை. அது பல விளைவுகளை ஏற்படுத்தும். தற்போது மத்தியில் உள்ள அரசு ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே ஆட்சி, ஒரே குடும்ப அட்டை, ஒரே கல்வி என எல்லாவற்றையும் இப்படி புகுத்த நினைக்கிறார்கள். அது முடியாது” என்றார்,. தமிழகத்தில் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பதே தெரிய வில்லை. 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்று கூறுவது சாத்திய மில்லை. 5 ஆம் வகுப்பிலும், 8 ஆம் வகுப்பிலும் அமைச்சர்கள் பொதுத்தேர்வை எழுதிவிட்டா வந்தார்கள்? இது தேவையில்லாதது. தமிழக கல்வித்துறை குழப்பத்தில் உள்ளது. அரசு பணத்தில் முதலமைச்சர் வெளிநாடு சென்றார். அதனால் நாங்கள் கேள்வி கேட்டோம். அதற்காக சொந்த பணத்தில் வெளிநாடு செல்லும் மு.க.ஸ்டாலினை பார்த்து எப்படி சென்றார்? என கேட்பது எந்த வகையில் நியாயம். நாங்கள் என்ன அரசு பணத்திலா வெளிநாடு சென்றோம்,”.இவ்வாறு அவர் கூறினார்.
ஓசூரில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
கிருஷ்ணகிரி, செப்.20- ஓசூர் பகுதியில் பல கடைகளில் உடலுக்கு தீமை ஏற்படுத்தும் குட்கா, பான் மசாலா பொருட் விற்பனை தடையின்றி நடந்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்ககளை சேர்ந்தவர்களே இங்கு குடோன்களில் பதுக்கி வைத்து விற்று வருவதாக தெரிய வருகிறது. நகரின் ஒரு மளிகை கடையில் தீபாராம், பல்ராம் என்ற இரு வட மாநில இளைஞர்கள் விற்றுக் கொண்டிருப்பது காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். நகரின் மையப் பகுதி யான ஸ்ரீசாய் பாபா கோவில் தெருவில் ஒரு குடோனில் ரூ. 4 லட்சத்திற்கும் அதிக மதிப்பிலான குட்கா பான் மசாலா பொருட்களின் மூட்டைகளை பதுக்கி வைத்து விற்று வருவது தெரிய வந்தது. காவல்துறையினர் அப்பொருள்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குற்றங்களை தடுக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு
வேலூர், செப். 20- மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் சமூகத்தில் குற்றங்களைத் தடுக்க முடியும் என்று சென்னை காவல் பயிற்சிக் கல்லூரித் தலைவர் சாரங்கன் தெரிவித்தார். வேலூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் 199 பள்ளிகளில் மாணவர்கள் காவல் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 8,800 மாணவர்கள் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒவ்வொரு பள்ளியிலும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில், சென்னை காவல் பயிற்சிக் கல்லூரித் தலைவர் சாரங்கன், பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்து பேசுகையில்,“நாட்டில் எத்தனையோ சட்டங்கள் இருந்தாலும் குற்றங்களைத் தடுக்க முடிவதில்லை. எனவே, குற்றங்களைத் தடுக்க வழிகள் தேவைப்படுகின்றன. 7,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி குற்றங்களைத் தடுக்க முடியும்” என்றார். எதையும், யாரையும் மதிக்கக் கூடாது என்ற மனநிலை தற்போது உருவாகி இருப்பதாகத் தெரிகிறது. தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் பின்பற்றுவதில் பலர் அலட்சியம் காட்டு கின்றனர். நல்லோழுக்கத்தையும், விதிமுறைகளையும் பின்பற்ற மாண வர்களுக்குப் பயிற்சி அளித்தால் மட்டுமே முடியும் என்றும் அவர் கூறினார். வேலூர் சரக டிஐஜி காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.