சென்னை:
காய்கறி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றிநியாயவிலையில் கிடைப்பதை தமிழக அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பண்டிகை காலம் நெருங்கி வரும்பல காரணங்களால் வெங்காய விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. சிலஇடங்களில் காய்கறி விலைகளும் உயர்ந்திருக்கின்றன. கொரோனா தொற்றின் காரணமாக பொருளா தாரமும், தனி மனிதர்களின் வருமானமும் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கும் இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுமிகப்பெரும் சுமையாக ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும்.எனவே, உரிய முன்னெச்சரிக்கை யுடன் வெங்காயம் உட்பட காய்கறிமற்றும் அத்தியாவசியப் பொருட் களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.
அறிவிப்புகளாலும், ஆணைகளாலும் மட்டும் விலைவாசியை குறைத்துவிட முடியாது. மாறாக, கேரள மாநிலத்தில் பண்டிகை காலங்களில் மாவேலி ஸ்டோர் என்னும் கடைகளின் மூலம் அரசேகுறைந்த லாபத்தில் கடைகளை நடத்தி மக்களை துயரச் சுமையி லிருந்து பாதுகாத்து வருவது போல தமிழக அரசும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், தடையில்லாமல் கிடைப்பதற்கும் ரேசன் கடைகள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நடமாடும் கடைகள் மூலம் இந்த பொருட்களை விற்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.