விழுப்புரம், ஆக. 2- விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு தினசரி பட்டா, உதவித் தொகை, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் கோரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்கள் இயற்கை உபாதைகளுக்கு போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை. கடந்த 2013ஆம் ஆண்டு மாவட்ட புத்தாக்க நிதியில் இருந்து 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த புதிய கழிப் பறை கட்டடம் இன்றுவரை திறக்கப்பட வில்லை. எனவே உடனடியாக கழிப்பறையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.