ராணிப்பேட்டை, ஜூன் 27- தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களைத் தில்லியிலிருந்து காணொ லிக்காட்சி மூலம் தலைமை இயக்குநர் எஸ்.என்.பிர தான் திறந்துவைத்தார். ராணிப்பேட்டை மாவட் டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை 4வது மையத்தில் 1,200க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ள னர். இவர்களுக்குத் துணை யாக மோப்ப நாய்களும் உள்ளன. இவர்கள் நாட்டில் எங்கு இயற்கை பேரிடர்கள் ஏற் பட்டாலும், உடனடியாக அங்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள். சென்னை மௌலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய பலரை உயிருடன் மீட்டது, சென்னை வெள்ளம் ஏற் பட்ட போது மீட்புப் பணியில் ஈடுபட்டு பல உயிர்களை காப்பாற்றியது குறிப் பிடத்தக்கது. இந்திய மட்டுமல்லாது உலகளவில் சிறப்பாகச் செயல்படும் மீட்பு படை எனப் பெயர் பெற்றுள்ள நிலையில், மேலும் பல் வேறு பயிற்சிகள் வழங்கு வதற்காகக் கூடுதல் பயிற்சி மையக் கட்டிடம், மீட்பு வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் உயரதிகாரிகள் குடியிருப்பு என ரூ. 6.50 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்தக் கட்டிடங்களைத் தில்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் தேசிய பேரிடர் மீட்புப்படை தலைமை இயக்குநர் எஸ்.என்.பிரதான் திறந்து வைத்தார். அரக்கோ ணத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு மைய மூத்த அதிகாரி ரேகா நம்பி யார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.