கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு கொண்டுவரந்த மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் மரணமடைந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 29-ஆம் தேதியன்று மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதா (தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937) தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின்படி, கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த நிலையில், மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.