tamilnadu

திருநின்றவூர் , திருவள்ளூர் செய்திகள்

வங்கியில்  கொள்ளை முயற்சி

திருநின்றவூர், ஆக.28- திருமுல்லைவாயல் ராஜாஜி தெருவில் ஆந்திரா வங்கி செயல்பட்டு வருகிறது. புதனன்று (ஆக.28) காலை ஊழியர்கள் வழக்கம் போல் வங்கியை திறக்க வந்தனர். அப்போது வங்கியின் வாயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டி ருந்தது.  இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். பின்னர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.  மேலும் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது வங்கியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பாதிவான காட்சிகளை பார்த்தபோது, அதிகாலை 3 மணியளவில்  மர்ம நபர் ஒருவர்வங்கியின் கிரில்கேட்டை உடைத்து உள்ளே நுழைந்த காட்சி பதிவாகியுள்ளது. இதன் பிறகு அந்த கேமரா இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி லாக்கர்களை மர்ம நபர் உடைக்க முடியாத தால், பல கோடி ரூபாய் பணம், நகைகள் தப்பியது. வங்கியில் நுழைந்த மர்ம நபர் யார்? அவனுடன் எத்தனை பேர் வந்தனர் என்பது அருகிலுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பதிவின் மூலம் விசாரணை நடைபெற்ற வருகிறது. 

வாலிபரை கொன்று ஏரியில் புதைப்பு

திருவள்ளூர், ஆக.28-  திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூரில் தனியார் தொழிற்சாலையின் பின்புறம் ஏரி உள்ளது.  செவ்வாயன்று (ஆக.27) மாலை இந்த ஏரிக்கரையோரம் தொழிலாளர்கள் சிலர் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரை ஓரத்தில் உள்ள முள் புதருக்குள் மர்ம நபர்கள் சிலர் கும்பலாக இருப்பதை கண்டு அங்கு சென்று பார்த்துள்ளனர். இவர்கள் வருவதை அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.  அங்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் பாதி புதைந்த நிலையில் இருப்பதை கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் மேல்நல்லாத்தூர் அமுதா நகர் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (20) என்பது தெரியவந்தது. அவரது உடல் முழுவதும் ரத்தம் உறைந்து காணப்பட்டது. தப்பி ஓடிய மர்ம கும்பல் அவரை அடித்து கொன்று உடலை புதைக்க முயற்சித்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

குடிநீர் வழங்க கோரி மறியல்

திருவள்ளூர், ஆக.28-  திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் இருளஞ்சேரி ஊராட்சியில் பிளேஸ் தோட்டம் கிராமம் உள்ளது. கடந்த 3 மாதங்களாக இந்த கிராம மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும், அருகில் ஓடும் கூவம் ஆற்றில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கிராம மக்கள் முறையிட்டனர். என்றாலும், எவ்வித பயனும் இல்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந் நிலையில், உடனே குடிநீர் வழங்க கோரியும், கழிவு நீரால் நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி யும், பிளேஸ் தோட்டம் கிராம மக்கள் புதனன்று ( ஆக.28) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடம் வந்த காவல்துறையினர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதை அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பாலசுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. 

திருக்கழுக்குன்றம் புறவழிச்சாலைத் திட்டம் வனப்பகுதியில் சாலை அமைக்க 5 ஆண்டுகளுக்கு பின் அனுமதி 

செங்கல்பட்டு, ஆக.28-  காஞ்சிபுரம் மாவட்டம், சதுரங்கப்பட்டினம் -  திருத்தணி  இடையே  நெடுஞ்சாலையை  மேம்படுத்தும் பணிகள் ரூ.184.97 கோடி மதிப்பில்  2015 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் மற்றும் திருக்கழுக்குன்றம் - சதுரங்கப்பட்டினம் ஆகிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நிறை வடைந்துள்ளது.  மேலும் இச்சாலையில்  திருக்க ழுக்குன்றம் நகருக்கு வெளியே புறவழிச்சாலை யும் அமைக்கப்பட்டுள்ளது.  ஒரகடம்  வனப்பகுதியில் 340 மீட்டர்  நீளத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டிய நிலையுள்ளது. இதற்கு வனப்பகுதியின் நிலம் சுமார் 0.782 ஹக்டேர் தேவைப்படுகிறது. மேலும் 98 மரங்கள் வெட்ட வேண்டி யுள்ளது. இதனால் வனத்துறையிடம் 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்துறை அனுமதிகேட்டிருந்தது. ஆனால் வனத்துறை அனுமதி கொடுக்காமல் இருந்தது. இதனால் சாலை அமைக்கும் பணி தொடர முடியாமல் இருந்தது.  இந்நிலையில், ஒரகடம் வனப்பகுதியில் மரங்களை அகற்றி சாலை அமைக்க 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வனத்துறை அனுமதியளித்துள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கூறுகையில், ‘ திருக்க ழுக்குன்றம் புறவழிச்சாலை க்காக வனப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகளுக்கு மத்திய அரசின் சுற்று சூழல் துறை மற்றும் வனத்துறை யின் அனுமதி பெற்று மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டது. வனத்துறையினர் அப்பகுதி யில் ஆய்வு செய்து தற்போது ஒப்புதல் அளித்துள்ள னர். ஒரகடம் பகுதியில் விடுபட்டுள்ள சாலைப் பணி கள் விரைவில் தொடங்க ப்பட உள்ளது’ என்றார்.