பெரியகுளத்தில் மேலும் மூவருக்கு கொரோனா
தேனி, ஜுன் 15- பெரியகுளத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. பெரியகுளத்தில் 70 வயது மருத்துவ ருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் மூலம் அவரது நட்பில் இருந்த10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டது. திங்களன்று நடைபெற்ற சோதனை யில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பெரியகுளம் அழகப்பன் சந்து 20 வயது வாலிபருக்கும்,ஒரு பெண்ணிற் கும் தொற்று உறுதியானது. இவர்கள் இருவரும் பெரியகுளம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கிறார்கள். தேவதானப்பட்டி அருகே புல்லக்க பட்டி, டி.வி. நகரில் 50 வயது நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள் ளது. இவர் கேரளா மாநிலம் கோதமங்கலம் என்ற ஊரில் கூலி வேலை செய்து வந்துள் ளார். கடந்த 13.6.2020 ஆம் தேதி கேரளா விலிருந்து புல்லக்காபட்டி கிராமத்திற்கு வந்துள்ளார். இவர் தற்போது க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட் டுள்ளார்.
82 பேருக்கு தொற்று பரிசோதனை
திருவில்லிபுத்தூர், ஜூன் 15- கொரோனா காரணமாக வெளி மாநி லங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அழகாபுரி சோதனைச் சாவடி வழியாக விருதுநகர் மாவட்டத்திற்கு வருபவர்களை திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பல்கலைக்கழகம், பெண் கள் கல்லூரி ஒன்றிலும் தங்க வைத்து தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் கல்லூரியில் சுமார் 97 பேர் தங்க வைத்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் அதில் 82 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டது இதுகுறித்து முகாம் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் 97 பேர் உள்ளனர் அதில் 82 பேர் ரத்த மாதரி எடுக்கப்பட்டுள்ளது மீதி உள்ள 15 பேருக்கு ஏற்கனவே ரத்த மாதிரி கள் எடுக்கப்பட்டு விட்டது” என்றார்.
போலி இ-பாஸ் 3 பேர் மீது வழக்கு
திருவில்லிபுத்தூர் ஜூன் 15- கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்கள், சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க திருவில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரி சோதனைச்சாவடியில் 24 மணி நேரமும் காவல் துறை, வரு வாய்த் துறையினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் சென்னையிலிருந்து கார் ஒன்றில் மதுரை வழியாக திருவில்லிபுத்தூர் வந்த காரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்தக் காரில் மூன்று பேர் இருந்தனர் மேலும் அவர்கள் இணையவழி அனுமதி சீட்டை அதிகாரியிடம் காட்டியுள்ளனர். அதை வாங்கி சோதனை செய்த அதி காரிகள் அதுபோல் போலி என்பது தெரிய வந்தது இதுதொடர்பாக நத்தம்பட்டி காவல் துறையினர் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொரோனா நிவாரணம் வழங்கல்
சிவகங்கை, ஜூன் 15- காரைக்குடி அழகப்பா பல்க லைக்கழகம் கொரோனா நோய் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனொரு பகுதியாக அழகப்பா பல்கலைக்கழக மும், அழகப்பச் செட்டியார் பொறியி யல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம், காரைக்குடி வாழும் கலை அமைப்பு ஆகியவை இணைந்து அழகப்பா பல்கலைக்கழ கத்தில் பணியாற்றும் தற்காலிகப் பணி யாளர்கள் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகு ப்பை திங்களன்று வழங்கினர். நிகழ்வில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் நா. இராஜேந்திரன், பதிவாளர் குருமல்லேஷ் பிரபு, தேர்வா ணையர் கண்ணபிரான், அழகப்பச் செட்டி யார் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க செயலாளர் செந்தில் குமார், வாழும் கலை அமைப்பின் மைய ஒருங்கிணைப்பாளர்கள் பழனி யப்பன், பழனியப்பன், முருகப்பன் பல்க லைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் விமலா, சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்ட னர்.