tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள் 

வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்றத்துக்கு 2021 ஜனவரி 14, 15 ஆகிய  தேதிகளில்பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள் ளார்.

                                  $$$$$$$$$$$$$$$$$$$$$$$$ 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                $$$$$$$$$$$$$$$$$$$$$$$$ 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது280 கோடி ரூபாய்க்கு முறைகேட்டு புகார் எழுந்துள்ளது. புகார் அளித்தவர்களுக்கு அடுத்தவாரம் நோட்டீஸ் அனுப்பி நேரில் விசாரணை நடத்தநீதிபதி கலையரசன் குழு திட்ட மிட்டுள்ளது. 

                                $$$$$$$$$$$$$$$$$$$$$$$$ 

அத்தியாவசிய பணியாளர் களுக்காக மீண்டும் 244 மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

                                $$$$$$$$$$$$$$$$$$$$$$$$ 

நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 5,000 உயிரி எரிவாயு ஆலைகளை அமைக்கும் மத்திய அரசின் திட்டம், மூங்கில் உற்பத்தியை அதிகரிக்கும் என்று இந்திய மூங்கில் மையத்தின் தலைவர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

;