tamilnadu

img

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?

சென்னை,ஜன.30- தமிழ்நாட்டில் பிரதமரின் வீடு  கட்டும் திட்டத்தை சரியாகச் செயல்படுத்த வில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ரவி, தனது எக்ஸ்  தள பக்கத்தில்;- நிர்வாக அக்கறை யின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால்  நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின்  வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற  முடியாமல் போனது வருத்தமளிக்கி றது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி தந்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஐ.பெரிய சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்:- நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி ஊராட்சியில் பிரதம மந்திரி  ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 127 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனு மதி வழங்கப்பட்டு இதுவரை 75  பயனாளிகள் வீடுகள் கட்டி முடித்துள்ள னர். மீதமுள்ள 52 பயனாளிகள் வீடுகள்  கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஒன்றிய அரசால் 31,051 வீடுகள் மட்டும்  வழங்கப்பட்டு 23,110 வீடுகள் பயனாளி களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ், ஒரு வீடு கட்டுவதற்கு ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை ரூ.1.20 லட்சம் ஆகும். இத்திட்டத்தில் ஒன்றிய அரசு தன் பங்காக வீடு கட்ட 72 ஆயிரம் ரூபாய்  மட்டுமே வழங்குகிறது. ஆனால், ஊரகப் பகுதிகளில் வசிக் கும் மக்களின் நலன் கருதி தமிழ்நாடு  அரசு மாநிலத்தின் நிதி பங்களிப்பாக ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் வழங்கு கிறது.

இதனுடன் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் மூலம் ரூ.26,460 , தூய்மை பாரத இயக்கம் மூலம்  ரூ.12,000 உடன் சேர்ந்து தமிழ்நாட்டில்  ஒரு வீட்டின் அலகுத் தொகை ரூ.2,78,460  ஆக உள்ளது. இந்தியாவிலேயே அதிக  அளவு தமிழ்நாட்டில் தான் பயனாளி களுக்கு பிரதம மந்திரி ஊரக குடியிருப் புத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அதிக தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பதவியேற்றவுடன் 2,41,861 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட  அனுமதி வழங்கப்பட்டது.

ஏற்கெனவே அனுமதி வழங்கி முடிவுறாமல் இருந்த  வீடுகளையும் சேர்த்து 7.5.2021 க்கு  பின்னர் இதுவரை 2,93,277 வீடுகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த அரசு பதவி யேற்ற பிறகு,  ஒன்றிய அரசு நிதியிலி ருந்து ரூ.2933.31 கோடி வரப்பட்டுள் ளது. மாநில அரசு இத்திட்டத்திற்கு ரூ.3116.54 கோடி நிதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறை யாக தேர்ந்தெடுக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

வெண்மணிக்கு அனுமதி வழங்காத ஒன்றிய அரசு
பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு ஊராட்சி  வாரியாக வீடுகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒன்றிய  அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டு தகுதி வாய்ந்த பயனாளிகள் இல்லாத ஊராட்சிகளில் இருந்து, தகுதி  வாய்ந்த பயனாளிகள் அதிகம் உள்ள  ஊராட்சிகளுக்கு வீடுகளை மாற்றி  வழங்க, ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக் காத காரணத்தால், வெண்மணி போன்ற ஊராட்சிகளுக்கு இத்திட்டத் தின் கீழ் தேவைக்கேற்ப வீடுகள் வழங்க இயலவில்லை.

 தற்போது தமிழ்நாடு அரசு குடிசை  வீடுகளுக்கு நடத்தப்பட்ட கணக்கெடுப் பில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வே ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  வெண்மணி ஊராட்சியில் மொத்தம் 66 குடிசை வீடுகள் தகுதி வாய்ந்தவை யாக கண்டறியப்பட்டுள்ளது. மேற் காணும் குடிசை வீடுகள் தமிழ்நாடு அரசின் ஊரக குடியிருப்பு திட்டம் மூலம்  கான்கிரீட் வீடுகளாக இனி வரும் காலங்களில் மாற்றப்படும். எல்லோருக்கும் எல்லாம் என்ற  கொள்கையுடன் தொடர்ந்து செயல் படும் இந்த அரசு, ஊரகப் பகுதி மக்க ளுக்கு தேவையான வீடு கட்டும் திட்டத்தை தொடர்ந்து திறன்பட செயல்படுத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.