சென்னையில் ஹிஜாப் அணிந்து சென்ற தாயை பள்ளி நிர்வாகம் அனுமதிக்க மறுத்த நிலையில் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த ஆஷிக் மீரான் அவரது மனைவியுடன் தனது மகனிற்கு சேர்க்கை கோரி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்பொழுது ஆஷிக் மீரானின் மனைவி ஹிஜாப் அணிந்துள்ளதால் பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
ஹிஜாப்பை கழற்றி விட்டுப் பள்ளிக்குள் நுழையுமாறு ஆஷிக் மீரானின் மனைவியைப் பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகம் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் ஆஷிக் மீரான் சோலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து மாணவர்கள் தேர்வு எழுதாத அவலம் ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் ஹிஜாப் அணிந்ததால் குழந்தையின் தாயை பள்ளிக்கு அனுமதிக்க மறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.