tamilnadu

img

தொழிலாளர் நல ஆணையர் முன்பு ஒப்புக்கொண்டபடி 258 தினக்கூலி

தொழிலாளர் நல ஆணையர் முன்பு ஒப்புக்கொண்டபடி 258 தினக்கூலி ஊழியர்களையும் மற்றும்  ஜெட்ராட், சில்ட் ஆட்டோ ஓட்டுநர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு சட்டப்படியான கூலி வழங்குவதோடு, களப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (ஜூலை 8) சிந்தாதரிப்பேட்டையில் உள்ள மெட்ரோ வாட்டர் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு சங்கத்தின் துணைத்தலைவர் சி.சத்யநாதன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன், சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பழனி, பொருளாளர் இ.ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.