“கம்யூனிச பூதத்தைக் கண்டு ஐரோப்பிய கண்டமே நடுநடுங்கிக் கொண்டிருகிறது” என்று மிகுந்த நம்பிக்கையோடும் தொலைநோக்கோடும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முன்னறிவிப்பு செய்த இளைஞன் காரல் மார்க்ஸ். இவனை எப்படி அழிப்பது என்று இன்றும் யோசித்துக்கொண்டிருக்கிறது சுரண்டும் கூட்டம். இவன் சொன்ன பாதை அன்றி பாட்டாளி வர்க்கம் வேறு பாதையில் விடிவைப் பெறமுடியாது என்பதை ஒவ்வொரு நொடியிலும் உலக நிகழ்வும் வாழ்க்கை அனுபவமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது” என்று மூத்த பத்திரிகையாளர் சு.பொ. அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.