tamilnadu

img

கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான இணைய இணைப்பு விரைவில் திறக்கப்படும்

சென்னை, டிச.27 - நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான இணைய இணைப்பு கூடிய விரைவில் திறக்கப்படும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த் உறுதி அளித்துள்ளார்.

ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்தை செவ்வாயன்று (டிச 26) சந்தித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் எஸ்.மிருதுளா, ஆர்.பாரதி ஆகியோர் மனு அளித்து பேசினர்.

அப்போது, நடப்பாண் டில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப் பிப்பதில் இருக்கக்கூடிய குளறுபடிகளையும், மாண வர்கள் எதிர் கொண்டுள்ள சிரமங்களையும் எடுத்துக் கூறி சரி செய்ய வேண்டும்  என்றும், கல்வி நிலையங் களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தகவல்களை நெறிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த ஆணையர், “2023-2024 நடப்பு கல்வி ஆண்டில் புதியதாக விண்ணப்பிக்க உள்ள மாணவர்களுக்கான இணைப்பை கூடிய விரை வில் தொடங்கப்படும். அதில்  மாணவர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படாத வகை யில் கல்வி உதவித்தொகை இந்தாண்டு வழங்கப்படும்” என்று உறுதி அளித்ததாக ச.மிருதுளா தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மாநிலக்குழு உறுப்பினர் கள் ஆனந்த் குமார், அருண், தமிழ் ஆகியோர் உடனிருந்தனர்.