சென்னை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த 2 மாத காலமாக கணிக்க முடியாத அளவிற்கு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தினசரி கொரோனா மாதிரிகளின் வருகை எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 75,076 மாதிரிகள் பரிசோதனைக்கு வந்தன. இதிலிருந்து 73,162 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. பரிசோதனைக்கு பிறகு 5,986 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
மொத்த மாதிரிகள் எண்ணிக்கை - 39,88,599
பரிசோதனை செய்யப்பட்ட மாதிர்களின் எண்ணிக்கை - 38,51,411
பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை - 139 (அரசு - 63, தனியார் - 76)
வெளிமாநில, வெளிநாடு வருகை (கொரோனா பாதிப்பு) - 19