tamilnadu

img

சென்னையில் தனியார் பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து  

சென்னையில் தனியார் பெயிண்ட் குடோனில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

சென்னை அம்பத்தூர் அருகே சங்கர் என்பவருக்குச் சொந்தமான ஸ்டாலின் ஸ்பெஷாலிட்டி பெயிண்ட்ஸ் எனும் நிறுவனத்துக்குச் சொந்தமான ரசாயன கெமிக்கல் குடோன் உள்ளது.  இந்நிலையில் இன்று பிற்பகல் குடோனில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக உயரழுத்த பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து குடோன் முழுவதும் தீ பரவ தொடங்கியுள்ளது.  இதைகண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர், மாதவரம் , திருவிகநகர், செங்குன்றம், செம்பியம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்புக் குழுவினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.