தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிய, புதிதாக வாட்ஸ் அப் சேனல் துவங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், "TNDIPR, Govt of Tamilnadu" என்ற பெயரில் வாட்ஸ்ப் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. அத்துறை சார்பில் முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், யூடியூப் பக்கங்களை தொடர்ந்து வாட்ஸ் அப் சேனலும் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் QR Code ஸ்கேன் செய்து அரசின் திட்டங்களை வாட்ஸ் அப் சேனல் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.