சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது. நாளைய தினம் புயலாக வலுபெறும் நிலையில், வரும் 10 ஆம் தேதிக்கு பிறகு ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, தூத்துக்குடி, நாகை, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், பாம்பன், எண்ணூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இன்று இரவு அல்லது நாளை மாலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.