41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் சேலம் மற்றும் எடப்பாடி பகுதியில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் முத்து, சேலம் மாவட்டத் தலைவர் தங்கராசு, செயலாளர் கலைவாண அந்தோணி, மாநில துணைத்தலைவர் சிங்கராயன், முருகன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்டப் பொருளாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.