வேலூர், ஜூலை 9- அரசு நிதியுதவி பெறும் இந்து மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மடிக்கணினி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு படித்த மாணவர்களுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை. அதனால் மாணவர்கள் மடிக்கணினி கேட்டு பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) நாகராஜ், நகர காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக அரசு விரைவில் மடிக்கணினி விநியோகிக்க உள்ளதாகவும், வந்தவுடன் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.