சூறைக்காற்று: அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலையை மணல் மூடியது
தனுஷ்கோடி கடற்பகுதியில் வீசிய சூறைக் காற்றால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மணல் பரவிக் கிடக்கிறது. இதனால் அரிச்சல்முனைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு வாகனங்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.