tamilnadu

img

அதிநவீன மின்சார பேருந்துகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

அதிநவீன மின்சார பேருந்துகள்  இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

சென்னை, ஜூன் 29- சென்னை மாநகரில் தற்போது டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரு கிறது. அந்த வகையில், சென்னை மாநகர் போக்கு வரத்துக் கழகம் சார்பில், 5 பணிமனைகளின் மூலம் 625 மின்சாரப் பேருந்து கள் ஒப்பந்தத்தின் அடிப்  படையில் இயக்க நட வடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது.  மின்சாரப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளி களுக்கென 6 இருக்கை கள் தனியாக அமைக்கப்  பட்டுள்ளன. மாற்றுத்திற னாளிகள் ஏறுவதற்கு வசதி யாக தரை வரை கீழிறங்கும் வகையில் பட்டிக்கட்டு அமைப்புகளுடன் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பேருந்தின் ஒவ்வொரு இருக்கைக்கு கீழுவும் கைப்பேசி மின்னேற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கை க்கும் சீட்டு பெல்ட் அமைக்கப் பட்டுள்ளது. மின்சாரப் பேருந்து முழுவதும் 7 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. குறிப்பாக, மழைக்காலத்தில் பேருந்துக்குள் தண்ணீர் செல்லாத வகையில் பேருந்தின் உயரத்தை உயர்த்துவதற்கு தனியாக வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. தானியங்கி பேருந்து நிறுத்த அறி விப்பு, ஜி.பி.எஸ். வழி யாகச் செயல்படும் சிக்னல் அமைப்பு, பெரிய எல். இ.டி திரைகள், தமிழ், ஆங்கிலத்தில் வழித்தட அறிவிப்பு போன்ற வசதி களும் மின்சாரப் பேருந்தில் இடம்பெற்றுள்ளன. இந்த பேருந்துகளின் சேவையை திங்களன்று (ஜூன் 30) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.