tamilnadu

img

சங்கர நேத்ராலயா நிறுவனர் மறைவு: முதல்வர் இரங்கல்

சென்னை,நவ.21- சங்கர நேத்ராலயாவின் நிறுவனர், பிரபல விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.எஸ். பத்ரிநாத் உடல் நலக் குறைவு காரணமாக செவ்வாயன்று (நவ.21) காலமானார். அவருக்கு வயது 83.

நாட்டின் மிகப்பெரிய தன்னார்வ கண் மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர் நேத்ராலயா நிறுவனர் எஸ்.எஸ். பத்ரிநாத் நாட்டின் சிறந்த கண் மருத்துவராக அங்கீகரிக்கப்பட்டவர்.

அமெரிக்காவில் உயர் படிப்புகளை  படித்து, இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும்  என்ற சேவை நோக்குடன் பத்ரிநாத் தொடங்கிய சங்கர நேத்ராலயா மருத்துவமனை பல்கிப் பெருகி நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இந்த சங்கர நேத்ராலயா  நாட்டின் மிகப்பெரிய அறக்கட்டளை கள் ஒன்றாகும்.

சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டன. இவரால்  நிறுவப்பட்ட சங்கர நேத்ராலயா சன்ஸ்தான் தினமும் நூற்றுக்கணக் கான ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மையமாக திகழ்கிறது.

பத்ரி நாட்டின் அசல் பெயர் சங்கமேடு சீனிவாச பத்ரிநாத். 1940 பிப்ரவரி 24 பிறந்தார். இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான ‘பத்மபூஷன்’ விருதை பெற்றார். மருத்துவர் பி.சி. ராய் விருது உட்பட்ட  பல விருதுகளையும் பெற்றுள்ளார். பத்ரிநாத்தின் மனைவி பெயர் வசந்தி. இவர் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் ரத்த நோய் நிபுணர் ஆவார்.

முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் புகழ்பெற்ற  கண் மருத்துவருமான எஸ்.எஸ். பத்ரி நாத் மறைந்தார் என்றறிந்து வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினருக்கும் மருத்து வத் துறை நண்பர்களுக்கும் எனது  ஆழ்ந்த இரங்கல் களையும் ஆறுதலை யும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று  தெரிவித்திருக்கிறார்.